இந்தியர்களுக்கு இந்திய வழிபாட்டு முறையிலேயே இயேசுவைப் பற்றி அறிவிக்கவும் வாழ்ந்து காட்டவும் தங்களைத் தியாகம் செய்த சின்னண்ணன் பேட்டன்*
இன்றைய சமுதாயம் பலவிதமான தீமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது .
மத வெறியினால் ஆண்டுதோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான கொலைகள் , ஜாதி வெறியினால் ஏற்படும் கொடுமைகள் , பண வெறியினால் ஏற்பட்டிருக்கும் லஞ்சம் , அதிகார வெறியினால் உண்டாயிருக்கும் அடிமைத்தனங்கள் இவையாவும் நமது சமுதாயம் சீர்கெட்டுப் போகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றன .
இச்சீர்கேடுகளிலிருந்து சமத்துவமான சமுதாயம் எப்படி உருவாக முடியும் ?
இயேசு பெருமானின் அன்பு ஒன்றே இத்தனை சீர்கேடுகளையும் நீக்கி நமது சமுதாயத்திற்கு விடிவைத்தர முடியும் .
எளிமை , தூய்மை , துறவறம் ஆகிய நற்பண்புகளை ஏற்று நமது நாட்டில் அமைதியைத் தர வந்தார் பேட்டன் .
இவரது இயற்பெயர் எர்ணஸ்து பாரஸ்தர் பேட்டன் .
ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்தவர் .
மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் .
இளமைப் பருவம் முதலே சீரிய கிறிஸ்தவ வாழ்வில் தன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார் .
கல்லூரிப் பருவம் . மருத்துவப் படிப்பில் நுழைந்தார் . அங்கே தன் ஆன்மீகச் சகோதரரான *பெரியண்ணன் '* என்று அழைக்கப்படும் சவரிராயன் ஜேசுதாசஸை சந்தித்தார் .
இருவரும் கிறிஸ்துவுக்குள் தங்களை அர்ப்பணித்தார்கள் . இந்தியர்களுக்கு இந்திய வழிபாட்டு முறையிலேயே இயேசுவைப் பற்றி அறிவிக்கவும் வாழ்ந்து காட்டவும் தங்களைத் தியாகம் செய்தனர் .
தமிழ்நாட்டில் திருப்பத்தூர் என்ற இடம் . எளிமையான வாழ்வும் , எதார்த்தமான செயலும் , அன்பான பேச்சும் பேட்டனின் மொத்த வடிவமாக காண்போரை கவர்ந்திழுத்தன .
கிறிஸ்துவின் அன்பை கிராமங்கள்தோறும் எடுத்துரைத்த இச்சேவகர் சிறியவர்களின் சின்னண்ணனாக வாழ்ந்து மறைந்தார்.
No comments:
Post a Comment