புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருவிருந்தில் பங்கேற்கும் போது அதில் இருக்கும் இதை கவனித்து இருக்கிறீர்களா?

நீங்கள் நற்கருணைகாரரா? திருவிருந்தில் பங்கேற்கும் போது அதில் இருக்கும் இதை கவனித்து இருக்கிறீர்களா?
நாம் அனைவரும் நமது சபையில் நற்கருணை எடுத்திருப்போம். அப்போது நமது ஆல்டர் மேசையில் பல பாத்திரங்கள் இருந்திருக்கும். அதில் இருந்து அப்பத்தையும் திராச்சைரசத்தையும் குருவானவரும், உதவி குருவனவர்களும் பரிமாறுவார்.
அவைகள் என்ன என்ன? என்பதை பற்றி கொஞ்சம் தெளிவாக காண்போம்.
இதிலே நம் சபையில் ஒவ்வொரு விசயமும் மிகவும் நுணுக்கமாக கையாளப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பகுதி பகுதியாக விளக்கினால் படத்தையும், விளக்கத்தையும் எளிதாக புரிந்து கொள்ளலாம் என்பதற்காக அவ்வாறு விளக்குகிறேன்.
பகுதி 1
திருவிருந்தில் திராட்சைஇரசம் கொடுக்கும் பாத்திரம் அல்டெர் க்கு நடுவில் திருச்சிலுவையின் அருகில் காணப்படும். இது கார்போனல் என்று அழைக்கப்படும் மேசை விரிப்பின் மீது வைக்கபட்டிருக்கும். அந்த பாத்திரம் சாலிஸ் என்று அழைக்கப்படும். (படம் 1)
பகுதி 2
அதற்க்கு மேலே முன்றாக மடிக்கப்பட்ட ஒரு சுத்தமான துணி அதை முடியுள்ளவாறு வைக்கபட்டிருக்கும். இதற்க்கு புரிபையர் என்று பெயர். (படம் 2)
பகுதி 3
புரிபையர்க்கு மேல் பேட்டன் எனப்படும் தட்டு வைக்கப்பட்டிருக்கும். (படம் 3)
பகுதி-4
அந்த தட்டில் குருவானவர்களுக்கு என்று கொடுக்கப்படும் (பொதுவாக இது மற்ற வேபரை விட பெரிதாக இருக்கும்) அப்பம் (வேபர்) இருக்கும். (படம்-4)
பகுதி-5
பால் எனப்படும் அட்டை அந்த பேட்டன் எனப்படும் தட்டின் மீது வைக்கப்படும் (படம்-5)
பகுதி-6
இதன் பின்பே நாம் அனைவரும் காணும் அலங்கரிக்கப்பட்ட துணியை வைத்து அந்த மொத்த பாத்திரமும் மூடப்பட்டிருக்கும். (படம்-6)
பகுதி-7
இந்த துணிக்கு மேல் பர்ஸ் எனப்படும் ஒரு அட்டை வைக்கபட்டிருக்கும் (படம்-7)
நாம் நமக்கென்று தேவனை துதிக்க ஒரு வழிமுறையை வைத்துள்ளோம். அதை அறிந்து கொள்வோம். திருச்சபை வழிபட்டு முறைகளின் அர்த்தங்களை அறிந்து கொள்வோம். தேவ பிரசன்னத்தை உணருவோம்.
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory