புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜான் ஹோல்ம்ஸ்

காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்களை கிறிஸ்துவின் மந்தைகளாக மாற்றிய ஜான் ஹோல்ம்ஸ்
பாப்புவா நியூகினியா தீவு . அங்கு வாழும் மக்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள் .
உயிருடன் மனிதர்களைக் கடித்து . ருசித்து சாப்பிடும் நர மாமிசப் பட்சிணிகள் . அழுக்கு நிறைந்த உடலுடன் துர்நாற்றம் உடையவர்களாக நடமாடும் நாகரிகமில்லா மக்கள் .
இவர்களின் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் , மண்டை ஓடுகளாலான அலங்காரம் காணப்படும் .
பல நூற்றாண்டுகளாகவே இம்மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பதற்கு ஆட்கள் யாரும் செல்லவில்லை .
அவ்விதம் சென்றவர்களில் சிலரும் தங்கள் நாடு திரும்பவில்லை .
இம்மக்களைப் பற்றி கேள்விப்பட்டார் ஜான் ஹோல்மஸ் .
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த நியூகினியா தீவு மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்கத் தீவிரம் கொண்டார் .
எனவே , எண்டன் மிஷனெரி ஸ்தாபனத்தில் இணைந்தார் .
ஜேம்ஸ் சால்மர்ஸ் என்ற மினாரியுடன் இணைந்து பணி செய்ய தன் ஆவலைத் தெரிவித்தார் .
தன்னுடைய விருப்பம் நிறைவேற்றப்படவே , அதிக மகிழ்ச்சியுடன் கையில் ஒரு பழைய பெட்டியுடன் , ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் பயணமானார் .
வியாழன் என்ற தீவு கப்பல் வந்து நின்றது .
ஜேம்ஸ் சால்மர்ஸ் என்ற மிஷனெரி ஜான் ஹோல்ம்ஸை எதிர்நோக்கி நின்றார் .
அவரைத் தனது சிறிய கப்பலில் ஏற்றிக்கொண்டு பாப்புவா தீவிற்குச் சென்றார் .
அம்மக்களின் நிலையைக் கண்ட ஹோல்மஸ் ஒரு நொடி கதிகலங்கினார் .
உடலிலே துணிகள் இல்லாமல் , சகிக்கக் கூடாத துர்நாற்றம் மிக்கவர்களாக நின்று கொண்டிருந்தனர் மக்கள் .
முதலில் அவர்கள் மொழியைக் கற்றுக் கொண்ட இவர் , அவர்களுடன் நட்புடன் பழக ஆரம்பித்தார் .
மக்களின் மூட நம்பிக்கைகளினிமித்தம் ஏற்பட்ட சண்டைகளினால் , பல மனிதர்கள் கொல்லப்பட்டபோது , அவர்களிடம் சமரசத்தை ஏற்படுத்தி அமைதியை நிலைநாட்டினார் .
பள்ளிக்கூடங்களையும் , வீடுகளையும் கட்டினார் .
வேதாகமத்தை அவர்கள் மொழியிலேயே வாசிப்பதற்கு உதவினார் . இதனால் , பாப்புவா தீவின் மக்களின் வாழ்க்கைத் தரம்மாறியது .
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்கள் கிறிஸ்துவின் மனிதர்களாக மாறினர் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory