இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - 1*
நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்கள் CMS மிஷன் தலைமைமிஷனரியாக 07.07.1820 ல் பாளை வந்தடைந்தார் அன்று முதல் அக்கால ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டமெங்கும் (நெல்லை,தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்கள்) குதிரைமூலம் சுற்றியலைந்து நற்செய்தி அறிவித்து வந்தார்.
*மிஷனின் தொடக்கம்* மேல்நெல்லைப் பகுதியில் ரேனியஸும் அவரால் பாளையில் நடத்தப்பட்ட செமினரி மாணவர்கள் தாவீது, மாசில்லாமணி, ஆசீர்வாதம் ஆகியோரும் இணைந்து செய்த நற்செய்தி பணியால் 1824 ல் நெடுவிளை, கோவிந்தப்பேரி 1825 ல் கரிசல், ஓடைக்கரை, செவல், துவரைக்குளம் கிராமங்கள் கிறிஸ்தவத்தை ஏற்றன.
அவையனைத்தும் இடையன்குளத்தைச் சுற்றியிருந்த கிராமங்கள் அவையனைத்தும் இடையன்குளத்தோடு உறவுமுறைத் தொடர்பு கொண்ட கிராமங்கள் அக்கிராமங்களில் உள்ளவர்கள் பனையோலைக் குடிசைகளில் வாழ்ந்தவர்களாக பனையேற்றுத் தொழிலைச் செய்துவந்த நாடார் சமூகத்தினர். அக்கிராமங்களில் கிறிஸ்தவத்தை ஏற்றவர்கள் தங்களது உறவுமுறைக் கிராமங்களுக்கு கிறிஸ்தவத்தை அறிவிக்க ரேனியஸால் ஊக்கப்படுத்தப்பட்டிருந்தனர்.
*இடையன்குளத்தில் கிறிஸ்தவம்*
இடையன்குளத்தின் அருகில் இருந்த கரிசல் கிராம சபைஊழியரும் கரிசல் சபையாரும் இடையன்குளத்தில் நற்செய்தி அறிவித்ததன் பயனாக 1826 ல் மாற்றம் ஏற்பட்டது. 1827 ல் 10 குடும்பத்தினர் கிறிஸ்தவத்தை ஏற்றதோடு தாங்கள் முன்பு வழிபட்ட கோவிலையே தேவாலயமாக்க தீர்மானம் செய்தனர் ரேனியஸால் ஜெபஞானம் உபதேசியார் இடையன்குளத்திற்கு நியமிக்கப்பட்டார்.
இடையன்குளத்தின் அருகில் இருந்த கரிசல் கிராம சபைஊழியரும் கரிசல் சபையாரும் இடையன்குளத்தில் நற்செய்தி அறிவித்ததன் பயனாக 1826 ல் மாற்றம் ஏற்பட்டது. 1827 ல் 10 குடும்பத்தினர் கிறிஸ்தவத்தை ஏற்றதோடு தாங்கள் முன்பு வழிபட்ட கோவிலையே தேவாலயமாக்க தீர்மானம் செய்தனர் ரேனியஸால் ஜெபஞானம் உபதேசியார் இடையன்குளத்திற்கு நியமிக்கப்பட்டார்.
*முதல்ஞானஸ்நானம்*
17.12.1827 ல் ஆனந்தம்மை,சுப்பிரமணியன்,முத்துநாடான், மாசானம் ஆகியோருக்கு அன்பாயி,வேதமாணிக்கம்,முத்துநாதன், ஞானாயுதம் ஆகிய பெயர்களில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
17.12.1827 ல் ஆனந்தம்மை,சுப்பிரமணியன்,முத்துநாடான், மாசானம் ஆகியோருக்கு அன்பாயி,வேதமாணிக்கம்,முத்துநாதன், ஞானாயுதம் ஆகிய பெயர்களில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment