இடையன்குளத்தை மையமாகக் கொண்ட CMS மிஷன் பணி - 3*
*எதிர்ப்புகளின் மத்தியில் மிஷன் பணி*
அக்காலத்தில் இடையன்குளம் நாடார் சமூகத்தினர் முழுவதுமாக கிறிஸ்தவராகவில்லை. அம்மன் கோவிலை வழிபட்டு வந்தோர் அதிகமாகக் குடியிருந்து வந்தனர் அவர்களுக்கு சாமியாடியாகப் பெண்ணொருவர் இருந்தார் இடையன்குளத்திலிருந்து கிறிஸ்தவத்தை விரட்ட அம்மன்கோவில் கொடைவிழாவை 1832 ஏப்ரலில் விமரிசையாகக் கொண்டாட அவர் ஏற்பாடு செய்தார். சுற்றியிருந்த உறவுமுறைக்கிராமங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. கொடை விழா நடந்த நேரத்தில் காலரா நோய் பரவ அதில் பங்கேற்ற அநேகர் மரணமடைந்ததையும் பங்கேற்காத புதிய கிறிஸ்தவர்களின் மத்தியில் காலரா பரவாததையும் கண்ட சாமியாடிப் பெண் தங்களுக்காக ஜெபிக்கவும் தங்களை திருச்சபையில் சேர்க்கவும் இடையன்குளம் சபைஊழியராக இருந்த தேவசகாயம் உபதேசியாரிடம் வேண்ட அவர் அதை ஏற்று அவர்களனைவருக்காகவும் ஜெபித்தார் காலரா நின்றது. அனைவரும் சபையில் சேர்ந்தனர். அந்தஆண்டில் சபை மூன்றுமடங்காகப் பெருகியது.
அக்காலத்தில் இடையன்குளம் நாடார் சமூகத்தினர் முழுவதுமாக கிறிஸ்தவராகவில்லை. அம்மன் கோவிலை வழிபட்டு வந்தோர் அதிகமாகக் குடியிருந்து வந்தனர் அவர்களுக்கு சாமியாடியாகப் பெண்ணொருவர் இருந்தார் இடையன்குளத்திலிருந்து கிறிஸ்தவத்தை விரட்ட அம்மன்கோவில் கொடைவிழாவை 1832 ஏப்ரலில் விமரிசையாகக் கொண்டாட அவர் ஏற்பாடு செய்தார். சுற்றியிருந்த உறவுமுறைக்கிராமங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. கொடை விழா நடந்த நேரத்தில் காலரா நோய் பரவ அதில் பங்கேற்ற அநேகர் மரணமடைந்ததையும் பங்கேற்காத புதிய கிறிஸ்தவர்களின் மத்தியில் காலரா பரவாததையும் கண்ட சாமியாடிப் பெண் தங்களுக்காக ஜெபிக்கவும் தங்களை திருச்சபையில் சேர்க்கவும் இடையன்குளம் சபைஊழியராக இருந்த தேவசகாயம் உபதேசியாரிடம் வேண்ட அவர் அதை ஏற்று அவர்களனைவருக்காகவும் ஜெபித்தார் காலரா நின்றது. அனைவரும் சபையில் சேர்ந்தனர். அந்தஆண்டில் சபை மூன்றுமடங்காகப் பெருகியது.
*இடையன்குளம் கிராமத்தார் மூலம் விசுவாசபுரம் மிஷன் கிராமம் உருவாதல்*
கனம்.ரேனியஸ் ஐயரவர்களின் காலத்தில் இடையன்குளத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப. த்து 7 அண்ணன் தம்பிகள் வடலிவிளையோடிருந்த தொடர்பின் காரணமாக அதையொட்டியிருந்த தெற்குவள்ளியூர் மேலச்சன்முகபுரம் வடலிவிளை காருண்யபுரம் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் குளக்கரையருகில் குளத்துஉள்வாய் என்ற கிராமத்தில் குடியேறினர் வடலிவிளை மற்றும் இடையன்குளம் கிராமத்தாரால் உருவான குக்கிராமம் இது. கிறிஸ்தவ நற்செய்தியை ஏற்ற அவர்களுக்கு துன்பங்கள் ஏற்படவே அக்கிராமத்தையொட்டி நிலத்தை வாங்கி அதில் அவர்களனைவரையும் குடியேற்றி ஆசீர்வதித்து அந்த மிஷன் கிராமத்திற்கு 1834 ல் விசுவாசபுரம்
என ரேனியஸ் ஐயவர்கள் பெயரிட்டார்.
என ரேனியஸ் ஐயவர்கள் பெயரிட்டார்.
**மூன்று பரிசுத்தவாட்டிகள்*
கனம்.ரேனியஸ் ஐயரவர்கள் காலத்தில் இடையன்குளம் கிராமத்தில் மூன்று பரிசுத்தவாட்டிகளான தாய்மார் இருந்ததாகவும் அவர்கள் மூவரும் மாதந்தோறும் திருவிருந்து ஆராதனைக்காக 15 மைல் (24 கி.மீ) தூரம் நடந்து பாளையங்கோட்டைக்கு சென்று வந்ததாக ரேனியஸ் ஐயரவர்கள் குறிப்பிடுகிறார்.(தொடரும்)
(ஜா.ஜான்ஞானராஜ்
கல்லிடைக்குறிச்சி)
(ஜா.ஜான்ஞானராஜ்
கல்லிடைக்குறிச்சி)
No comments:
Post a Comment