புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இந்திய மிஷனெரி சங்க ஊழியர் - 5 திரு . C . K . முத்துசுவாமி

தோர்ணக்கல் திருநெல்வேலியின் இந்திய மிஷனெரி சங்க ஊழியர் - 5*

திரு . C . K . முத்துசுவாமி இவர் 1908 ஆம் ஆண்டில் தோர்ணக்கல் செல்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டு , 1909 இல் அங்கு சென்றார் .

இங்கு வருமுன் இவருக்குத் திருமணமாகவில்லை . இங்கு வந்த பின் இ . மி . ச மூலம் திருநெல்வேலியிலுள்ள ஒரு பெண்ணுடன் , இவருக்குத் திருமணம் நடைபெற்றது .

இவர் தோர்ணக்கல்லில் கட்டடங்கள் கட்டுவதிலும் , பிள்ளைகளுக்குத் தச்சு வேலை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமுடையவராய் ஊழியம் செய்தார் .

இவர்களிடம் வேலை கற்றவர்கள் அநேகர் இன்றும் அவ்வேலையின் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் .

அப்படிப்பட்டவர்களில் ருத்திராசி தாமஸ் , செதல லூக்கா , கொச்சர்ல யோவான் , சிலுக்கபத்தினி லுக்கா , முதலியோர் ஒரு சிலர் .

இவ்வேலையைக் கற்பிக்கத் திரு . முத்துசுவாமிக்கு உதவியாக திரு . R . E . தேவதாசு என்பவரும் சிலகாலம் உதவி செய்தார் .

இவர்களின் திறமைக்குச் சான்று தோர்ணக்கல் பேராயத்தின் எஃபிபனி தேவாலயமாகும் .

தற்சமயம் இவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று , ஓய்வூதியத்துடன் , தோர்ணக்கல் பகுதியிலுள்ள பல ஊழியக் கட்டடங்களைக் கட்டுவதில் தலைசிறந்தவராய் விளங்குகின்றார் .

அவற்றுள் தோர்ணக்கல் திருமண்டல உயர்நிலைப்பள்ளியும் ஒன்று.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory