ஆயிரக்கணக்கானோரை கிறிஸ்துவண்டை ஈர்க்கும் சிறந்த கருவியாக செயலாற்றிய மேரி பிஷ்ஷர்*
#Tinnevelly #Historical
600 மைல்கள் தூரம் . தனிமையில் நடக்க வேண்டும் , உங்களால் முடியுமா ? முடியும் என்று சாதித்துக் காட்டினார் மேரி பிஷ்ஷர் .
ஆபத்துகளும் , பேராபத்துகளும் , பயங்களும் , திகில்களும் நிறைந்த பயணம் அது . கேட்கவே சற்று பயமாகத் தான் உள்ளது . ஆனால் , கிறிஸ் து வி ன் அ ன் பு இ வ ரை ஆட்கொண்டபோது , தன் பயங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு , ஆண்டவரைக் குறித்து சாட்சி பகர துருக்கி நாட்டை நோக்கி பயணமானார் .
அரசன் சுல்தான் இவரை அன்போடு ஏற்றுக்கொண்டு , இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தைக் குறித்து ஆழமாக அறிந்து கொண்டான் .
1657ஆம் ஆண்டு இவர் மேற்கொண்ட பயணம் வெளிப்படையாக பயனைத் தரவில்லையெனினும் அநேகர் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்தது .
மேரி இப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு பல தடைகளைத் தாண்டி வர நேரிட்டது .
இவர் " இயேசுவின் நண்பர்கள் " என்ற இயக்கத்தை சார்ந்தவரானபடியால் , பரந்த , விரிந்த , தெளிவான மனநிலையுடன் அனைவருடனும் கிறிஸ்துவைப் பறைசாற்றுவதில் தீவிரம் காட்டினார் .
இதனால் தன் சொந்த நாட்டிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார் . கத்தோலிக்க போதகத்தைத் தாண்டி இவரது போதனை காணப்பட்டபடியால் பல கொடுமைகளை இவர் அனுபவிக்க வேண்டியிருந்தது . இவரிடமிருந்த புத்தகங்கள் பறிக்கப்பட்டு தீயிலிட்டு எரிக்கப்பட்டது .
இதனால் இவரது சாட்சி பகரும் வாழ்வு தடைசெய்யப்படும் என நினைத்தபோதிலும் , என்ன வந்தாலும் , எது நடந்தாலும் கிறிஸ்துவுக்குள் நிலைத்து நின்று தன் சாட்சியை வெளிப்படையாக பிரசங்கித்தார் .
12 வருட சாட்சி பகரும் மிஷனெரி வாழ்வுக்குப்பின் இவர் திருமணம் செய்துகொண்டு , தன் கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினார் .
தன் வாழ்நாள் இறுதிவரை சாட்சி பகர்வதை விடாமல் தொடர்ந்த இவர் ஆயிரக்கணக்கானோரை கிறிஸ்துவண்டை ஈர்க்கும் சிறந்த கருவியாக செயலாற்றி தன் வாழ்வை முடித்தார் .
#Tinnevelly #Historical
600 மைல்கள் தூரம் . தனிமையில் நடக்க வேண்டும் , உங்களால் முடியுமா ? முடியும் என்று சாதித்துக் காட்டினார் மேரி பிஷ்ஷர் .
ஆபத்துகளும் , பேராபத்துகளும் , பயங்களும் , திகில்களும் நிறைந்த பயணம் அது . கேட்கவே சற்று பயமாகத் தான் உள்ளது . ஆனால் , கிறிஸ் து வி ன் அ ன் பு இ வ ரை ஆட்கொண்டபோது , தன் பயங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு , ஆண்டவரைக் குறித்து சாட்சி பகர துருக்கி நாட்டை நோக்கி பயணமானார் .
அரசன் சுல்தான் இவரை அன்போடு ஏற்றுக்கொண்டு , இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தைக் குறித்து ஆழமாக அறிந்து கொண்டான் .
1657ஆம் ஆண்டு இவர் மேற்கொண்ட பயணம் வெளிப்படையாக பயனைத் தரவில்லையெனினும் அநேகர் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்தது .
மேரி இப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு பல தடைகளைத் தாண்டி வர நேரிட்டது .
இவர் " இயேசுவின் நண்பர்கள் " என்ற இயக்கத்தை சார்ந்தவரானபடியால் , பரந்த , விரிந்த , தெளிவான மனநிலையுடன் அனைவருடனும் கிறிஸ்துவைப் பறைசாற்றுவதில் தீவிரம் காட்டினார் .
இதனால் தன் சொந்த நாட்டிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார் . கத்தோலிக்க போதகத்தைத் தாண்டி இவரது போதனை காணப்பட்டபடியால் பல கொடுமைகளை இவர் அனுபவிக்க வேண்டியிருந்தது . இவரிடமிருந்த புத்தகங்கள் பறிக்கப்பட்டு தீயிலிட்டு எரிக்கப்பட்டது .
இதனால் இவரது சாட்சி பகரும் வாழ்வு தடைசெய்யப்படும் என நினைத்தபோதிலும் , என்ன வந்தாலும் , எது நடந்தாலும் கிறிஸ்துவுக்குள் நிலைத்து நின்று தன் சாட்சியை வெளிப்படையாக பிரசங்கித்தார் .
12 வருட சாட்சி பகரும் மிஷனெரி வாழ்வுக்குப்பின் இவர் திருமணம் செய்துகொண்டு , தன் கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினார் .
தன் வாழ்நாள் இறுதிவரை சாட்சி பகர்வதை விடாமல் தொடர்ந்த இவர் ஆயிரக்கணக்கானோரை கிறிஸ்துவண்டை ஈர்க்கும் சிறந்த கருவியாக செயலாற்றி தன் வாழ்வை முடித்தார் .
No comments:
Post a Comment