சரீர பாடு அனுபவிப்பதை மாபெரும் சிலாக்கியமாக எண்ணிய குவின்டின்*
#Tinnevelly #Historical
கிறிஸ்துவின் நற்செய்தி பரவுவதற்காக , யாவற்றையும் துறந்து , இரத்த சாட்சியாகவும் மரிக்க ஆயத்தமாயிருந்த ஆதித் திருச்சபையிலுள்ள பக்தர்களில் ஒருவரே குவின்டின் .
இவர் பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் . ஏமியன்ஸ் என்ற நகரில் தங்கி , தனது பரிசுத்தமான ஜீவியத்தாலும் , சாட்சி பகரும் வாழ்க்கை முறையாலும் , அற் பு த ங் க ள் செ ய் யு ம் வ ர த் தி னாலு ம் , ஆயிரக்கணக்கானோரை ஆண்டவரின் பாதத்தில் கொண்டு வந்தார் .
மக்களின் விசுவாச வாழ்வை பெலப்படுத்தி , அவர்களை கிறிஸ்துவுக்குள் வளரச் செய்து , சோதனைகளிலும் துணிந்து நின்று ஜெயம்பெற மக்களை உற்சாகப்படுத்தியவரே இவர்.
அந்நாட்களில் ரெக்டியஸ் வாரஸ் என்பவன் தலைவனாகச் செயல்பட்டு , கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தி வந்தான் . பலர் அவன் வாளுக்கு இரையாகி , இரத்த சாட்சிகளாக மரித்தார்கள் . இவன் , ஏமியன்ஸ் நகரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பதைக் கேள்விப்பட்டு மூர்க்கம்கொண்டவனாக அங்கு சென்றான்.
குவின்டின் போர்வீரர்களால் பிடிக்கப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார் . இவன் அவரை பலமுறை பயமுறுத்தியும் , சித்திரவதைகள் செய்தும் , கிறிஸ்துவை மறுதலிக்கக் கூறியும் , இவரின் உறுதியான விசுவாசத்தைக் கண்ட அவ்வரசன் , இரக்கமின்றி வாரினால் அடித்து , கொடும் துன்பங்களைக் கொடுத்து , துன்புறுத்தினான் . ஆயினும் , குவின்டின் சிறைச்சாலையில் கிறிஸ்துவைப் புகழ்ந்து பாடி , அச்சிறைச்சாலையில் உள்ளோரை கிறிஸ்துவண்டை வழிநடத்தினார் .
இவரின் தோள்பட்டையிலிருந்து முழங்கால் வரை இரண்டு இரும்பு கம்பிகளை செலுத்தியும் , விரல் நகங்களுக்குள் மெல்லிய இரும்பு கம்பிகளை குத்தியும் கொடுமைப்படுத்திப் பார்த்தான் . எனினும் , கிறிஸ்துவுக்காக சரீர பாடு அனுபவிப்பதை மாபெரும் சிலாக்கியமாக எண்ணிய குவின்டின் கிறிஸ்துவை மகிமைப்படுத்திக் கொண்டே இருந்தார் .
இதனால் வெகுண்டெழுந்த ரெக்டியஸ் வாரஸ் தன் வாளை உருவி , வேகமாக அவர் தலையை வெட்டினான் .
அவர் இரத்த சாட்சியாகி பல இதயங்கள் இயேசுவண்டை வர காரணமானார் .
#Tinnevelly #Historical
கிறிஸ்துவின் நற்செய்தி பரவுவதற்காக , யாவற்றையும் துறந்து , இரத்த சாட்சியாகவும் மரிக்க ஆயத்தமாயிருந்த ஆதித் திருச்சபையிலுள்ள பக்தர்களில் ஒருவரே குவின்டின் .
இவர் பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் . ஏமியன்ஸ் என்ற நகரில் தங்கி , தனது பரிசுத்தமான ஜீவியத்தாலும் , சாட்சி பகரும் வாழ்க்கை முறையாலும் , அற் பு த ங் க ள் செ ய் யு ம் வ ர த் தி னாலு ம் , ஆயிரக்கணக்கானோரை ஆண்டவரின் பாதத்தில் கொண்டு வந்தார் .
மக்களின் விசுவாச வாழ்வை பெலப்படுத்தி , அவர்களை கிறிஸ்துவுக்குள் வளரச் செய்து , சோதனைகளிலும் துணிந்து நின்று ஜெயம்பெற மக்களை உற்சாகப்படுத்தியவரே இவர்.
அந்நாட்களில் ரெக்டியஸ் வாரஸ் என்பவன் தலைவனாகச் செயல்பட்டு , கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தி வந்தான் . பலர் அவன் வாளுக்கு இரையாகி , இரத்த சாட்சிகளாக மரித்தார்கள் . இவன் , ஏமியன்ஸ் நகரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பதைக் கேள்விப்பட்டு மூர்க்கம்கொண்டவனாக அங்கு சென்றான்.
குவின்டின் போர்வீரர்களால் பிடிக்கப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார் . இவன் அவரை பலமுறை பயமுறுத்தியும் , சித்திரவதைகள் செய்தும் , கிறிஸ்துவை மறுதலிக்கக் கூறியும் , இவரின் உறுதியான விசுவாசத்தைக் கண்ட அவ்வரசன் , இரக்கமின்றி வாரினால் அடித்து , கொடும் துன்பங்களைக் கொடுத்து , துன்புறுத்தினான் . ஆயினும் , குவின்டின் சிறைச்சாலையில் கிறிஸ்துவைப் புகழ்ந்து பாடி , அச்சிறைச்சாலையில் உள்ளோரை கிறிஸ்துவண்டை வழிநடத்தினார் .
இவரின் தோள்பட்டையிலிருந்து முழங்கால் வரை இரண்டு இரும்பு கம்பிகளை செலுத்தியும் , விரல் நகங்களுக்குள் மெல்லிய இரும்பு கம்பிகளை குத்தியும் கொடுமைப்படுத்திப் பார்த்தான் . எனினும் , கிறிஸ்துவுக்காக சரீர பாடு அனுபவிப்பதை மாபெரும் சிலாக்கியமாக எண்ணிய குவின்டின் கிறிஸ்துவை மகிமைப்படுத்திக் கொண்டே இருந்தார் .
இதனால் வெகுண்டெழுந்த ரெக்டியஸ் வாரஸ் தன் வாளை உருவி , வேகமாக அவர் தலையை வெட்டினான் .
அவர் இரத்த சாட்சியாகி பல இதயங்கள் இயேசுவண்டை வர காரணமானார் .
No comments:
Post a Comment