புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

குவின்டின்

சரீர பாடு அனுபவிப்பதை மாபெரும் சிலாக்கியமாக எண்ணிய குவின்டின்*

#Tinnevelly #Historical

கிறிஸ்துவின் நற்செய்தி பரவுவதற்காக , யாவற்றையும் துறந்து , இரத்த சாட்சியாகவும் மரிக்க ஆயத்தமாயிருந்த ஆதித் திருச்சபையிலுள்ள பக்தர்களில் ஒருவரே குவின்டின் .

இவர் பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் . ஏமியன்ஸ் என்ற நகரில் தங்கி , தனது பரிசுத்தமான ஜீவியத்தாலும் , சாட்சி பகரும் வாழ்க்கை முறையாலும் , அற் பு த ங் க ள் செ ய் யு ம் வ ர த் தி னாலு ம் , ஆயிரக்கணக்கானோரை ஆண்டவரின் பாதத்தில் கொண்டு வந்தார் .

மக்களின் விசுவாச வாழ்வை பெலப்படுத்தி , அவர்களை கிறிஸ்துவுக்குள் வளரச் செய்து , சோதனைகளிலும் துணிந்து நின்று ஜெயம்பெற மக்களை உற்சாகப்படுத்தியவரே இவர்.

அந்நாட்களில் ரெக்டியஸ் வாரஸ் என்பவன் தலைவனாகச் செயல்பட்டு , கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தி வந்தான் . பலர் அவன் வாளுக்கு இரையாகி , இரத்த சாட்சிகளாக மரித்தார்கள் . இவன் , ஏமியன்ஸ் நகரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பதைக் கேள்விப்பட்டு மூர்க்கம்கொண்டவனாக அங்கு சென்றான்.

குவின்டின் போர்வீரர்களால் பிடிக்கப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார் . இவன் அவரை பலமுறை பயமுறுத்தியும் , சித்திரவதைகள் செய்தும் , கிறிஸ்துவை மறுதலிக்கக் கூறியும் , இவரின் உறுதியான விசுவாசத்தைக் கண்ட அவ்வரசன் , இரக்கமின்றி வாரினால் அடித்து , கொடும் துன்பங்களைக் கொடுத்து , துன்புறுத்தினான் . ஆயினும் , குவின்டின் சிறைச்சாலையில் கிறிஸ்துவைப் புகழ்ந்து பாடி , அச்சிறைச்சாலையில் உள்ளோரை கிறிஸ்துவண்டை வழிநடத்தினார் .

இவரின் தோள்பட்டையிலிருந்து முழங்கால் வரை இரண்டு இரும்பு கம்பிகளை செலுத்தியும் , விரல் நகங்களுக்குள் மெல்லிய இரும்பு கம்பிகளை குத்தியும் கொடுமைப்படுத்திப் பார்த்தான் . எனினும் , கிறிஸ்துவுக்காக சரீர பாடு அனுபவிப்பதை மாபெரும் சிலாக்கியமாக எண்ணிய குவின்டின் கிறிஸ்துவை மகிமைப்படுத்திக் கொண்டே இருந்தார் .

இதனால் வெகுண்டெழுந்த ரெக்டியஸ் வாரஸ் தன் வாளை உருவி , வேகமாக அவர் தலையை வெட்டினான் .

அவர் இரத்த சாட்சியாகி பல இதயங்கள் இயேசுவண்டை வர காரணமானார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory