*விவாதம் செய்வதற்காகவே வேதாகமத்தைப் படிப்பவர்தான் நீலகந்தகோரே சாஸ்திரி*
#Tinnevelly #Historical
விவாதம் செய்வதற்காகவே வேதாகமத்தைப் படிப்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?
சிலர் எதற்கெடுத்தாலும் வேதாகம வசனங்களை சுட்டிக்காட்டி தங்கள் காரியத்தை நியாயப்படுத்துவார்கள்.
இது தவறு என்று தெரிந்தும் சிலர் துணிகரமாக இச்செயலினைத் தொடர்வது மிகவும் வேதனையானது .
நெகேமியா நீலகந்தகோரே சாஸ்திரி என்பவர் இந்து வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்.
கோங்கனி நாட்டு பிராமணவம்சத்தவர். சுவிசேஷ ஊழியர்களோடு சாமர்த்தியமாகப் பேசி , அவர்களைத் தோல்வியடைய செய்யும்படி முயற்சிப்பது இவரது வாடிக்கை.
இவ்விதமாக இவர் வேதாகமத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது , இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தை வாசிக்க நேரிட்டது .
ஆம் . எவரையும் கிறிஸ்துவின்பால் ஈர்க்கும் இவ்வசனங்கள் நீலகந்த சாஸ்திரியின் உள்ளத்தில் பலமாக கிரியை செய்ய ஆரம்பித்தது .
இது தெய்வ வசனமென உணர்ந்தார் . இருதயத்தில் இயேசுவுக்கு இடம் தந்தார் . முதலில் வெளியரங்கமாக இயேசுவைக் குறித்து சாட்சியிட பயந்த இவர் , தன் தந்தையின் ஆலோசனையை நாடினார் . அவரோ இவரை மூடனென்று எள்ளிநகையாடினார்.
ஆனால் , சிலுவையின் வல்லமை இவரை முழுமையாக ஆட்கொண்டது .
ஞானஸ்நானம் பெற்று பகிரங்கமாய் இயேசு கிறிஸ்துவின் சீடனெனச்சாட்சி பகர்ந்தார் .
தன் சகோதரனையும் , மனைவியையும் அப்படியே கிறிஸ்துவண்டை கொண்டு வந்தார் .
பண்டித ரமாபாயை கிறிஸ்துவுக்குள் வழிநடத்திய பெருமையும் இவரைச் சாரும்.
ஏழையோடு ஏழையாகத் தன் வாழ்வை ஆரம்பித்து , அவர்களுக்கு தன் வாழ்வால் போதனை செய்தார் .
சத்தியத்தைத் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் போதிப்பதில் இவர் சிறந்தவர் .
இங்கிலாந்துக்குச் சென்ற இவர் இந்தியத் திருநாட்டின் சுவிசேஷப் பணிக்குத் தேவைகள் என்ன என்பதையும் , அவைகளின் முறைகளையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
இந்தியர்களுக்கு இந்தியர்களின் முறையில் சுவிசேஷம் அறிவிப்பதில் ஆர்வம் கொண்டவர் .
பல புத்தகங்களுக்குச் சொந்தக்காரர் .
ஆண்டவர் மேலேயே நம்பிக்கை வைத்த இவர் தேவசமாதானத்தோடே தன் வாழ்நாளை முடித்தார்.
#Tinnevelly #Historical
விவாதம் செய்வதற்காகவே வேதாகமத்தைப் படிப்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?
சிலர் எதற்கெடுத்தாலும் வேதாகம வசனங்களை சுட்டிக்காட்டி தங்கள் காரியத்தை நியாயப்படுத்துவார்கள்.
இது தவறு என்று தெரிந்தும் சிலர் துணிகரமாக இச்செயலினைத் தொடர்வது மிகவும் வேதனையானது .
நெகேமியா நீலகந்தகோரே சாஸ்திரி என்பவர் இந்து வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்.
கோங்கனி நாட்டு பிராமணவம்சத்தவர். சுவிசேஷ ஊழியர்களோடு சாமர்த்தியமாகப் பேசி , அவர்களைத் தோல்வியடைய செய்யும்படி முயற்சிப்பது இவரது வாடிக்கை.
இவ்விதமாக இவர் வேதாகமத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது , இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தை வாசிக்க நேரிட்டது .
ஆம் . எவரையும் கிறிஸ்துவின்பால் ஈர்க்கும் இவ்வசனங்கள் நீலகந்த சாஸ்திரியின் உள்ளத்தில் பலமாக கிரியை செய்ய ஆரம்பித்தது .
இது தெய்வ வசனமென உணர்ந்தார் . இருதயத்தில் இயேசுவுக்கு இடம் தந்தார் . முதலில் வெளியரங்கமாக இயேசுவைக் குறித்து சாட்சியிட பயந்த இவர் , தன் தந்தையின் ஆலோசனையை நாடினார் . அவரோ இவரை மூடனென்று எள்ளிநகையாடினார்.
ஆனால் , சிலுவையின் வல்லமை இவரை முழுமையாக ஆட்கொண்டது .
ஞானஸ்நானம் பெற்று பகிரங்கமாய் இயேசு கிறிஸ்துவின் சீடனெனச்சாட்சி பகர்ந்தார் .
தன் சகோதரனையும் , மனைவியையும் அப்படியே கிறிஸ்துவண்டை கொண்டு வந்தார் .
பண்டித ரமாபாயை கிறிஸ்துவுக்குள் வழிநடத்திய பெருமையும் இவரைச் சாரும்.
ஏழையோடு ஏழையாகத் தன் வாழ்வை ஆரம்பித்து , அவர்களுக்கு தன் வாழ்வால் போதனை செய்தார் .
சத்தியத்தைத் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் போதிப்பதில் இவர் சிறந்தவர் .
இங்கிலாந்துக்குச் சென்ற இவர் இந்தியத் திருநாட்டின் சுவிசேஷப் பணிக்குத் தேவைகள் என்ன என்பதையும் , அவைகளின் முறைகளையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
இந்தியர்களுக்கு இந்தியர்களின் முறையில் சுவிசேஷம் அறிவிப்பதில் ஆர்வம் கொண்டவர் .
பல புத்தகங்களுக்குச் சொந்தக்காரர் .
ஆண்டவர் மேலேயே நம்பிக்கை வைத்த இவர் தேவசமாதானத்தோடே தன் வாழ்நாளை முடித்தார்.
No comments:
Post a Comment