புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கெம்பர் ஐயர்

கொதித்து எழுந்த தாமஸ் கெம்பர் ஐயர்

நெல்லை திருமண்டலத்தில் தாமஸ் கெம்பர் என்று ஒரு குருத்துவ ஊழியர் இருந்தார் .

அவர் ஒரு சிறந்த ஜெப வீரர் . நற்குண , நற் செய்கைகள் நிரம்பப் பெற்றவர் .

இல்லற தருமத்தில் எவரும் அவருக்கு இணையாகார் . அவரது வாழ்வில் தூய்மையும் , ஊழியத்தில் வாய்மையுமிருந்தது .

கெம்பர் ஐயர் ஊழியர்களுக்கென ஒரு தியானக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார் .

அங்கு வந்திருந்த சபை ஊழியர் ஒருவர் கோர்ட்டிற்கான கேஸ் கட்டுகளைக் கக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு அங்குமிங்குமாகத் திரிந்தார் .

இக்காட்சியைக் கண்ட பக்திமானான கெம்பர் ஐயர் மிகவும் வேதனையுற்றார் .

மறுகூட்டம் ஆரம்பமானது .

அந்த சபை ஊழியர் கேஸ் கட்டுடன் நின்றுகொண்டிருந்தார் .

கெம்பர் ஐயருக்குக் கோபம் கட்டு மீறியது .

தம் பூத உடலை பூமி அதிரத்தக்கதாகக் குலுக்கினார் .

ஐயருக்கு என்னமோ ஏதோ என்று எல்லோரும் பயந்தார்கள் .

ஆனால் ஐயர் மேலும் அதிகமாக உடலைக் குலுக்கிக் கொண்டு அந்த ஊழியரைச் சுட்டிக்காட்டி , கேஸ் கட்டுகளை சுமந்து கொண்டு உலாவுகிற ஊழியனே , இயேசு கிறிஸ்து வரும்பொழுது நீரும் இப்படித்தான் நடுங்குவீர் என்று கூறி மகா பயங்கரமாக உடலை நிலம் அதிர நடுக்கிக் காட்டினார் .

உடன் ஊழியர்கள் யாவரும் பிரமித்தும் பயந்தும் போயினர் .

சிவில் வழக்குகளிலேயே காலங் கடந்தி வந்த அந்த ஊழியரும் அந்நாள் முதல் மனம் மாறினார் .

தகவல் திரட்டி வரலாற்று பார்வையிலிருந்து

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory