அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுத்த கால்வின் ஃபெர்பாங்க்ஸ்
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் அடிமை வியாபாரம் பெருமளவில் நடந்து கொண்டிருந்தது . அமெரிக்க வரி கணக்கு புத்தகங்களின்படி , 32 லட்சம் அடிமைகள் இருந்ததாகவும் , இவர்களின் விலை 100 கோடி என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது .
அன்றைய அமெரிக்கா அடிமைகளின் உழைப்பையே மூலதனமாக சார்ந்திருந்தது . எனவே அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் நாட்டின் எதிரிகளாகக் கருதப்பட்டனர் . ஆனால் , ஆண்டவரின் அன்பால் தொடப்பட்டவர்கள் இந்த அட்டூழியமான அவல நிலையைக் கண்டு , அமைதியாக இருக்கமுடியுமா ? கிறிஸ்துவுக்குள் எல்லோரும் சமம் என்பதை உணர்ந்த பின்னரும் , பொறுமை என்று பொறுத்துப்போக முடியுமா ? கால்வின் ஃபெர்பாங்க்ஸ் என்ற மெதடிஸ்ட்மிஷனெரி அடிமைத்தனத்தின் மீது ஆவேசம் கொண்டார் .
ஒருசமயம் அவர் அடிமைகளை விற்கும் சந்தைக்கு சென்றிருந்தார் . அங்கே எலிசா என்ற நீக்ரோ இன வாலிப பெண் விற்கப்படும்படியாக கொண்டுவரப்பட்டிருந்தாள் .
ஏலம் எடுக்கும்படியாக ஒரு பிரான்ஸ் நாட்டு வணிகனும் வந்திருந்தான் .
அப்பெண்ணை பார்த்தவன் இவளை ஏலம் எடுத்தால் நல்ல லாபத்திற்கு விற்க முடியும் என முடிவு செய்தான் , ஏலம் துவங்கியதும் ஃபெர்பாங்சும் கேட்கத் துவங்கினார் , இருவருக்குமிடையே ஏலத்தில் பலத்த போட்டி நிலவியது .
பிரஞ்சு வியாபாரி கடைசியாக 1 , 575 பாலர் என்று கேட்டான் . ஆனால் இவரோ 1585 டாலர் என்று கேட்டு அவளை விலைக்கு வாங்கினார் . அப்பொழுது அவள் இவர் காலை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள் . அந்த பிரஞ்சு வியாபாரி மிஷனெரியைப் பார்த்து " இவ்வளவு பணம் கொடுத்து இவளை வாங்கினீரே , என்ன செய்யப் போகிறீர் என்று கேட்டார் . அதற்கு அவர் இவளை விடுதலை செய்யப்போகிறேன் " என்றார் .
இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர் . இவளோ துள்ளிக் குதித்தாள் . அடிமை வியாபாரத்தைக் குறித்ததான இம்மிஷனெரியின் கரிசனை மாபெரியது .
இயேசு கிறிஸ்துவை அறியாமல் , அடிமைத்தனத்திற்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் மக்களைக்குறித்ததான் உங்களின் கரிசனை என்ன ?
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் அடிமை வியாபாரம் பெருமளவில் நடந்து கொண்டிருந்தது . அமெரிக்க வரி கணக்கு புத்தகங்களின்படி , 32 லட்சம் அடிமைகள் இருந்ததாகவும் , இவர்களின் விலை 100 கோடி என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது .
அன்றைய அமெரிக்கா அடிமைகளின் உழைப்பையே மூலதனமாக சார்ந்திருந்தது . எனவே அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் நாட்டின் எதிரிகளாகக் கருதப்பட்டனர் . ஆனால் , ஆண்டவரின் அன்பால் தொடப்பட்டவர்கள் இந்த அட்டூழியமான அவல நிலையைக் கண்டு , அமைதியாக இருக்கமுடியுமா ? கிறிஸ்துவுக்குள் எல்லோரும் சமம் என்பதை உணர்ந்த பின்னரும் , பொறுமை என்று பொறுத்துப்போக முடியுமா ? கால்வின் ஃபெர்பாங்க்ஸ் என்ற மெதடிஸ்ட்மிஷனெரி அடிமைத்தனத்தின் மீது ஆவேசம் கொண்டார் .
ஒருசமயம் அவர் அடிமைகளை விற்கும் சந்தைக்கு சென்றிருந்தார் . அங்கே எலிசா என்ற நீக்ரோ இன வாலிப பெண் விற்கப்படும்படியாக கொண்டுவரப்பட்டிருந்தாள் .
ஏலம் எடுக்கும்படியாக ஒரு பிரான்ஸ் நாட்டு வணிகனும் வந்திருந்தான் .
அப்பெண்ணை பார்த்தவன் இவளை ஏலம் எடுத்தால் நல்ல லாபத்திற்கு விற்க முடியும் என முடிவு செய்தான் , ஏலம் துவங்கியதும் ஃபெர்பாங்சும் கேட்கத் துவங்கினார் , இருவருக்குமிடையே ஏலத்தில் பலத்த போட்டி நிலவியது .
பிரஞ்சு வியாபாரி கடைசியாக 1 , 575 பாலர் என்று கேட்டான் . ஆனால் இவரோ 1585 டாலர் என்று கேட்டு அவளை விலைக்கு வாங்கினார் . அப்பொழுது அவள் இவர் காலை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள் . அந்த பிரஞ்சு வியாபாரி மிஷனெரியைப் பார்த்து " இவ்வளவு பணம் கொடுத்து இவளை வாங்கினீரே , என்ன செய்யப் போகிறீர் என்று கேட்டார் . அதற்கு அவர் இவளை விடுதலை செய்யப்போகிறேன் " என்றார் .
இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர் . இவளோ துள்ளிக் குதித்தாள் . அடிமை வியாபாரத்தைக் குறித்ததான இம்மிஷனெரியின் கரிசனை மாபெரியது .
இயேசு கிறிஸ்துவை அறியாமல் , அடிமைத்தனத்திற்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் மக்களைக்குறித்ததான் உங்களின் கரிசனை என்ன ?
No comments:
Post a Comment