உலகை கவர்ந்த இந்திய இளைஞனின் பிறந்த தினம் இன்று சாது சுந்தர் சிங்
#Tinnevelly #Christian #Historical
திபெத் நாடு . புத்த மதத்தைச் சார்ந்த மக்கள் , கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவோ , கேட்கவோ தடை செய்யப்பட்ட இடம் .
மீறினால் கொடூரமான . தண்டனை . உள்ளத்தில் கிறிஸ்துவையும் , கரங்களில் வேதாகமத்தையும் சுமந்து புறப்பட்டார் சாது சுந்தர்சிங் .
பிறப்பிலே அவர் ஒரு சீக்கியர் .
வளர்ப்பிலே மிகவும் சடங்காச்சாரங்களுடன் வளர்க்கப்பட்டவர் . 19வது வயதிலே திபெத்தை நோக்கி சுவிசேஷத்தைச் சுமந்து சென்றார் சாது .
திபெத் லாமாக்களால் அவர் பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார் . அவ்விடத்திலிருந்து 1889 விரட்டப்பட்டார். துன்பங்களை இன்பமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் சுவிசேஷப்பணியைத் தொடர்ந்தார்.
அந்தோ ! லாமாக்களின் தலைவனிடம் பிடிபட்டார் . தண்டனையோ மிகவும் கொடூரம் . பாழடைந்த கிணறு . தவறு செய்தவர்களை உள்ளே போட்டு மூடி விடுவார்கள் . உடல் அழுகி சாக வேண்டியது தான் . சாது சுந்தர் சிங்குக்கும் இதே தண்டனை கொடுக்கப்பட்டது .
உள்ளே விழுந்தவுடன் அவர் தோள்பட்டை உடைந்தது . அழுகிய பிண நாற்றத்தால் வயிறு குமட்டியது . எங்கு பார்த்தாலும் பிணங்கள் . கிணற்றிற்குள்ளிருந்தே ஜெபிக்க ஆரம்பித்தார் சுந்தர் சிங் . மூன்று நாட்களுக்குப்பின் ஓர் அதிசய மனிதரால் அக்கிணற்றுக் கதவு திறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார் . திபெத் , நேபாளம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஊழியம் செய்த இவர் எளிமையாகவும் , இனிமையாகவும் , உவமைகளாலும் போதிப்பதில் சிறந்தவர் .
இவரது நூல்கள் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஊன்றுகோல்கள் . இரத்தம் சிந்தும் பாதங்களையுடைய அப்போஸ்தலன் என்றும் , இந்திய அப்போஸ்தலன் என்றும் அழைக்கப்பட்ட சாதுசுந்தர் சிங் பிறந்தது இந்தத் தினத்தில் தான் .
#Tinnevelly #Christian #Historical
திபெத் நாடு . புத்த மதத்தைச் சார்ந்த மக்கள் , கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவோ , கேட்கவோ தடை செய்யப்பட்ட இடம் .
மீறினால் கொடூரமான . தண்டனை . உள்ளத்தில் கிறிஸ்துவையும் , கரங்களில் வேதாகமத்தையும் சுமந்து புறப்பட்டார் சாது சுந்தர்சிங் .
பிறப்பிலே அவர் ஒரு சீக்கியர் .
வளர்ப்பிலே மிகவும் சடங்காச்சாரங்களுடன் வளர்க்கப்பட்டவர் . 19வது வயதிலே திபெத்தை நோக்கி சுவிசேஷத்தைச் சுமந்து சென்றார் சாது .
திபெத் லாமாக்களால் அவர் பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார் . அவ்விடத்திலிருந்து 1889 விரட்டப்பட்டார். துன்பங்களை இன்பமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் சுவிசேஷப்பணியைத் தொடர்ந்தார்.
அந்தோ ! லாமாக்களின் தலைவனிடம் பிடிபட்டார் . தண்டனையோ மிகவும் கொடூரம் . பாழடைந்த கிணறு . தவறு செய்தவர்களை உள்ளே போட்டு மூடி விடுவார்கள் . உடல் அழுகி சாக வேண்டியது தான் . சாது சுந்தர் சிங்குக்கும் இதே தண்டனை கொடுக்கப்பட்டது .
உள்ளே விழுந்தவுடன் அவர் தோள்பட்டை உடைந்தது . அழுகிய பிண நாற்றத்தால் வயிறு குமட்டியது . எங்கு பார்த்தாலும் பிணங்கள் . கிணற்றிற்குள்ளிருந்தே ஜெபிக்க ஆரம்பித்தார் சுந்தர் சிங் . மூன்று நாட்களுக்குப்பின் ஓர் அதிசய மனிதரால் அக்கிணற்றுக் கதவு திறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார் . திபெத் , நேபாளம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஊழியம் செய்த இவர் எளிமையாகவும் , இனிமையாகவும் , உவமைகளாலும் போதிப்பதில் சிறந்தவர் .
இவரது நூல்கள் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஊன்றுகோல்கள் . இரத்தம் சிந்தும் பாதங்களையுடைய அப்போஸ்தலன் என்றும் , இந்திய அப்போஸ்தலன் என்றும் அழைக்கப்பட்ட சாதுசுந்தர் சிங் பிறந்தது இந்தத் தினத்தில் தான் .
No comments:
Post a Comment