*கடையனோடை திருச்சபை வரலாறும் கேமரர் ஐயரும்*
ஊர் வரலாறு ஆங்கில ஆட்சி ஆரம்பத்திற்கு முன்னரே இவ்வூர் தோன்றியதாகத் தெரிய வருகிறது .
இது முன்னர் திருநெல்வேலி மாவட்டம் , திருச்செந்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது .
கடயர்கள் என்ற சமுதாயத்தினர் ஏராளமாக வாழ்ந்தார்கள் .
நில புலன்களும் தனி ஓடை ( கால்வாய் ) பாசனமும் இருந்திருக்கிறது என்பதற்கான ரிவினியூ ஆதாரங்கள் உள்ளன .
ஆதியில் கடயனூர் என்று இருந்தது மாறி கடையனோடை என்றாகி விட்டது என்பது செவி வழிச் செய்தி கடயர்களால் உருவாக்கப்பட்ட ஊர்தான் கடையனோடை என்பது வரலாறு .
கி பி . 1901 ஆம் ஆண்டுக்கு முன்பே இங்குள்ள கடயர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கிறார்கள் .
பழங்காலக் கல்லறைகள் இதற்குச் சான்றாக உள்ளன .
கி . பி . 1917 இல் திருநெல்வேலி கலெக்டர் எச் ஆர் பேட் ஐ சி எஸ் . , அவர்களின் சர்வேப்படி கடையனோடை கடயர்கள் கிறிஸ்தவப் பொது ஊர்வலம் , வரவேற்பு இவைகளில் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்று அறிய முடிகிறது .
தற்சமயம் இவ்வூரின் ஆதி மக்களாகிய கடயர்கள் சிதறுண்டு மூக்குப்பீறி , தூத்துக்குடி , ராமேஸ்வரம் , அரியாங்குண்டு , வேர்கோடு , அக்காள்மடம் , தண்ணீர் ஊற்று , தென்குடா ஆகிய ஊர்களில் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள் .
கடையனோடை பேர்க்காரணம் அறிந்து மகிழ்ந்தேன் .
ஏ . எப் கேமரர் ஐயர் தோற்றுவித்த கடையனோடை சபையின் புதிய பொன் விழா 21 . 12 . 1997ல் கொண்டாப்பட்டுள்ளது .
கேமரர் ஐயரின் தந்தை ஜெர்மானியர் .
டேனிஷ் மிஷன் மூலமாக அனுப்பப்பட்டவர் .
அவர் வரும் வழியில் நன்னம்பிக்கை முனையில் கப்பல் உடைந்துவிட்டது .
அதன்பின் இலங்கை மார்க்கமாக தரங்கம்பாடிக்கு 1791 இல் வந்தார் .
அவர் மகன்தான் நாசரத் மிஷனரி ஏ . எப் . கேமரர் இருவர் பெயரும் ஒன்றே .
1841 இல் கடையனோடையில் கிறிஸ்தவம் வேர்க் கொண்டது .
1843ல் இது ஒரு பெரிய சபையாக மாறியது .
இச்சபையின் முதல் உபதேசியார் ஏ . யோபு அவர்கள் .
இச்சபைக்கு 1848 ல் ஆலயம் கட்டப்பட்டது .
அதன் கோபுரம் 1850 ல் எழுப்பப்பட்டது .
இதன் முதல் குருவானவராக அருள்திரு . வி . ஆபிரகாம் நாட்டையர் 1874ல் நியமிக்கப்பட்டு 38 ஆண்டுகள் பணியாற்றினார் .
100 ஆண்டுகளுக்குப் பின் தற்போதைய ஆலயம் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் அஸ்திபாரமிடப்பட்டு 1948 டிசம்பர் 21 ஆம் நாள் தோமாவின் திருநாளன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது .
தற்போதைய ஆலய கோபுரம் 1957 டிசம்பர் 20 இல் மங்கலப் படைப்பு செய்யப்பட்டது .
கேமரர் ஐயர் ஒருமுறை கூட தம் தாய்நாடு செல்லவில்லை .
அவர்தம் 87 ஆம் வயதில் 1891 செப்டம்பர் 2ம் நாள் நித்திய இளைப்பாறுதல் பெற்றார் .
இந்தியாவில் பிறந்து , இந்தியாவில் வளர்ந்து இந்திய மக்களுக்காகவே பாடுபட்ட கேமரர் ஐயரின் காலடிபட்ட புண்ணிய பூமி கடையனோடை
ஊர் வரலாறு ஆங்கில ஆட்சி ஆரம்பத்திற்கு முன்னரே இவ்வூர் தோன்றியதாகத் தெரிய வருகிறது .
இது முன்னர் திருநெல்வேலி மாவட்டம் , திருச்செந்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது .
கடயர்கள் என்ற சமுதாயத்தினர் ஏராளமாக வாழ்ந்தார்கள் .
நில புலன்களும் தனி ஓடை ( கால்வாய் ) பாசனமும் இருந்திருக்கிறது என்பதற்கான ரிவினியூ ஆதாரங்கள் உள்ளன .
ஆதியில் கடயனூர் என்று இருந்தது மாறி கடையனோடை என்றாகி விட்டது என்பது செவி வழிச் செய்தி கடயர்களால் உருவாக்கப்பட்ட ஊர்தான் கடையனோடை என்பது வரலாறு .
கி பி . 1901 ஆம் ஆண்டுக்கு முன்பே இங்குள்ள கடயர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கிறார்கள் .
பழங்காலக் கல்லறைகள் இதற்குச் சான்றாக உள்ளன .
கி . பி . 1917 இல் திருநெல்வேலி கலெக்டர் எச் ஆர் பேட் ஐ சி எஸ் . , அவர்களின் சர்வேப்படி கடையனோடை கடயர்கள் கிறிஸ்தவப் பொது ஊர்வலம் , வரவேற்பு இவைகளில் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்று அறிய முடிகிறது .
தற்சமயம் இவ்வூரின் ஆதி மக்களாகிய கடயர்கள் சிதறுண்டு மூக்குப்பீறி , தூத்துக்குடி , ராமேஸ்வரம் , அரியாங்குண்டு , வேர்கோடு , அக்காள்மடம் , தண்ணீர் ஊற்று , தென்குடா ஆகிய ஊர்களில் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள் .
கடையனோடை பேர்க்காரணம் அறிந்து மகிழ்ந்தேன் .
ஏ . எப் கேமரர் ஐயர் தோற்றுவித்த கடையனோடை சபையின் புதிய பொன் விழா 21 . 12 . 1997ல் கொண்டாப்பட்டுள்ளது .
கேமரர் ஐயரின் தந்தை ஜெர்மானியர் .
டேனிஷ் மிஷன் மூலமாக அனுப்பப்பட்டவர் .
அவர் வரும் வழியில் நன்னம்பிக்கை முனையில் கப்பல் உடைந்துவிட்டது .
அதன்பின் இலங்கை மார்க்கமாக தரங்கம்பாடிக்கு 1791 இல் வந்தார் .
அவர் மகன்தான் நாசரத் மிஷனரி ஏ . எப் . கேமரர் இருவர் பெயரும் ஒன்றே .
1841 இல் கடையனோடையில் கிறிஸ்தவம் வேர்க் கொண்டது .
1843ல் இது ஒரு பெரிய சபையாக மாறியது .
இச்சபையின் முதல் உபதேசியார் ஏ . யோபு அவர்கள் .
இச்சபைக்கு 1848 ல் ஆலயம் கட்டப்பட்டது .
அதன் கோபுரம் 1850 ல் எழுப்பப்பட்டது .
இதன் முதல் குருவானவராக அருள்திரு . வி . ஆபிரகாம் நாட்டையர் 1874ல் நியமிக்கப்பட்டு 38 ஆண்டுகள் பணியாற்றினார் .
100 ஆண்டுகளுக்குப் பின் தற்போதைய ஆலயம் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் அஸ்திபாரமிடப்பட்டு 1948 டிசம்பர் 21 ஆம் நாள் தோமாவின் திருநாளன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது .
தற்போதைய ஆலய கோபுரம் 1957 டிசம்பர் 20 இல் மங்கலப் படைப்பு செய்யப்பட்டது .
கேமரர் ஐயர் ஒருமுறை கூட தம் தாய்நாடு செல்லவில்லை .
அவர்தம் 87 ஆம் வயதில் 1891 செப்டம்பர் 2ம் நாள் நித்திய இளைப்பாறுதல் பெற்றார் .
இந்தியாவில் பிறந்து , இந்தியாவில் வளர்ந்து இந்திய மக்களுக்காகவே பாடுபட்ட கேமரர் ஐயரின் காலடிபட்ட புண்ணிய பூமி கடையனோடை
No comments:
Post a Comment