புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வில்லியம் கேரி

*மிஷனெரி இயக்கங்களின் தந்தை வில்லியம் கேரி பிறந்ததினம்* ஆகஸ்ட் -17

ஒர் செருப்புத் தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ? நம்பித்தான் ஆக வேண்டும் .

உலகத்தையே செப்பனிடப் பிறந்தார் வில்லியம் கேரி .

1793ம் ஆண்டு கல்கத்தாவில் காலடியெடுத்து வைத்த இவர் திரும்பி தன் நாட்டிற்குச் சென்றதே இல்லை .

நாற்பது ஆண்டுகள் ஆண் டவரின் பணியை அரும் பாடுகள் பட்டு செவ்வனே செய்தார் .

பிரச்சனைகளும் போராட்டங்களும் இவர் வாழ்வை பின்னிப் பிணைந்தது .

தன் அருமை மனைவி மூளைக் கோளாறினால் பாதிக்கப்பட்டார் .

குழந்தையும் சுகவீனத்தால் இறந்து போனது.

சோதனைகளை சாதனைகளாக மாற்ற ஆரம்பித்தார் வில்லியம் கேரி .

வங்காள மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து வெளியிட்டார் .

பல மொழிகளில் வேதாகமம் வெளிவரக் காரணமானார் .

முழு வேதாகமத்தை 20 மொழிகளிலும் , புதிய ஏற்பாட்டை 40 மொழிகளிலும் மொழிபெயர்க்கக் காரணமாயிருந்தவர்.

ஆசியாவில் செய்தித்தாள் , நீராவியால் இயங்கும் எஞ்சின் , சேமிப்பு வங்கி , தாவரவியல் சங்கம் ஆகியவைகளை முதன்முதலாகக்கொண்டுவந்தவர் .

பா ட ப் பு த் த க ங் க ைள யு ம் , இ ல க் க ண நூல் களை யு ம் எ ழு தி னார்.

பள்ளிக்கூடங்களும் , ஆதரவற்றோர் இல்லங்களும் இவரால் ஏற்படுத்தப்பட்டன .

சதி , உடன்கட்டை ஏறுதல் , குழந்தை திருமணம் போன்ற சமுதாயத் தீமைகளை வேருடன் அகற்றினார் .

அரசாங்க உதவியுடன் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றினார் . ' வங்காள உரைநடைத் தந்தை என்றும் தற்கால மிஷனெரி இயக்கங்களின் தந்தை " என்றும் போற்றப்படும் வில்லியம் கேரி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செராம்பூர் பல்கலைக்கழகம் ஆயிரமாயிரம் மாணவர்களை உருவாக்கியது .

இன்றும் வில்லியம் கேரியின் புகழை அது பறைசாற்றுகிறது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory