புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

நவீன சமுதாயத்தை உருவாக்கிய தலைசிறந்த சிற்பி

*நவீன சமுதாயத்தை உருவாக்கிய தலைசிறந்த சிற்பிகளில் கால்ட்வெலும் ஒருவர்*

1838ஆம் ஆண்டு கால்ட்வெல் தென்னிந்தியாவிற்கு வந்தபோது பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலே மூழ்கியிருக்கக் கண்டார்.

இயற்கை சக்திகளைக் குறித்த அச்சம் , பிற இனத்தவரைக் குறித்த அச்சம் , நோய் , மரணம் , ஆவியுலகம் ஆகிய ஒவ்வொன்றைக் குறித்தும் பேரச்சம் ! இத்தகைய அச்சங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை தருமாறு தெய்வத்திடம் அம்மக்கள் வேண்டிக் கொள்ளவில்லை ; மாறாக , தங்கள் தெய்வங்களைப் பற்றியும் கூட ஒருவிதமான பயத்தினால் நிறைந்திருந்தனர் .

பெண் பிள்ளைகள் உட்பட , மத இனவேறுபாடின்றி அனைத்து மக்களுடைய கல்விக் கண்களைக் கால்ட்வெல் திறந்துவிட்டார் .

மேலும் , அவர்களுடைய ஆன்மக் கண்களைத் திறக்கவும் பலவிதமான அச்சங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் கால்டுவெல் அயராது உழைத்தார் .

சமுதாயத்தில் இறைப்பற்றும் மனித நேயமும் இணைந்து வளரப் பெருமுயற்சி செய்தார் .

இவ்வாறு நவீன சமுதாயத்தை உருவாக்கிய தலைசிறந்த சிற்பிகளில் கால்ட்வெலும் ஒருவர்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory