*அக்கினியிலிருந்து பறிக்கப்பட்ட ஒரு கொள்ளி*
நெல்லையில் நிலவிய சமயப் பின்னணி
( ஆமோஸ் 4 : 11 )
இந்தக் காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவிக்குக் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படுகிறது .
கலப்படம் செய்யப்பட்ட சாராயத்தைக் குடித்ததின் விளைவாகவே கணவன் இறந்தாலும் அவனது மனைவிக்கு அரசாங்கம் பெரிய உதவித்தொகையை அளிக்கும் நிலை இந்தியாவில் இன்று உண்டு .
ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு , முதிர்வயதில் மரித்துப்போன கணனோடு இளவயது மனைவியையும் சேர்த்து வைத்து எரிப்பது நம் நாட்டு வழக்கம் .
மதுரையில் திருமலை நாயக்க மன்னன் 75வது வயதில் மரணம் அடைந்தபோது அவனது உடலோடு சேர்த்து எரிக்கப்படுவதற்காக அவனுடைய மனைவியர் சுமார் 200பேர் நகரின் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தமிழக வரலாறு இத்தகைய பின்னணியத்தில் , தஞ்சாவூரில் இறந்த கணவனின் எரியும் சிதையிலிருந்து அந்தணப் பெண்மணி கோகிலா , கர்னல்லிற்றில்ற்றன் ( ColonelLitleton ) என்ற ஆங்கிலப் போர் வீரனால் காப்பாற்றப்பட்டாள் , அவள் , சில ஆண்டுகளுக்குப் பின்பு 1778ல் பாளையங்கோட்டையில் ஷ்வார்ற்ஸ் ( F . C . Schwartz ) ஐயரிடம் க்ளாரிந்தா ( Clarinda ) என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்று , திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவராக மாறினாள் .
க்ளாரிந்தா உட்பட அந்த நாளில் கிறிஸ்தவர்களாக மாறியது மொத்தம் 40 பேர் .
அன்று முதல் நெல்லையில் கிறிஸ்தவம் வளர்ந்து வந்தது .
நெல்லையில் நிலவிய சமயப் பின்னணி
( ஆமோஸ் 4 : 11 )
இந்தக் காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவிக்குக் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படுகிறது .
கலப்படம் செய்யப்பட்ட சாராயத்தைக் குடித்ததின் விளைவாகவே கணவன் இறந்தாலும் அவனது மனைவிக்கு அரசாங்கம் பெரிய உதவித்தொகையை அளிக்கும் நிலை இந்தியாவில் இன்று உண்டு .
ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு , முதிர்வயதில் மரித்துப்போன கணனோடு இளவயது மனைவியையும் சேர்த்து வைத்து எரிப்பது நம் நாட்டு வழக்கம் .
மதுரையில் திருமலை நாயக்க மன்னன் 75வது வயதில் மரணம் அடைந்தபோது அவனது உடலோடு சேர்த்து எரிக்கப்படுவதற்காக அவனுடைய மனைவியர் சுமார் 200பேர் நகரின் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தமிழக வரலாறு இத்தகைய பின்னணியத்தில் , தஞ்சாவூரில் இறந்த கணவனின் எரியும் சிதையிலிருந்து அந்தணப் பெண்மணி கோகிலா , கர்னல்லிற்றில்ற்றன் ( ColonelLitleton ) என்ற ஆங்கிலப் போர் வீரனால் காப்பாற்றப்பட்டாள் , அவள் , சில ஆண்டுகளுக்குப் பின்பு 1778ல் பாளையங்கோட்டையில் ஷ்வார்ற்ஸ் ( F . C . Schwartz ) ஐயரிடம் க்ளாரிந்தா ( Clarinda ) என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்று , திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவராக மாறினாள் .
க்ளாரிந்தா உட்பட அந்த நாளில் கிறிஸ்தவர்களாக மாறியது மொத்தம் 40 பேர் .
அன்று முதல் நெல்லையில் கிறிஸ்தவம் வளர்ந்து வந்தது .
No comments:
Post a Comment