*இடையன்குடியை மனையளவை செய்த கால்டுவெல்* (Survey)
*கிராம சீரமைப்பு*
*மரத்தில் ஏறி மனையளவை செய்தார்*
1842 ஆம் ஆண்டில் ஒரு நாள் .
உயரமான ஒரு மரத்தில் 28 வயது- நிரம்பிய கால்ட்வெல் பாதிரியார் சிரமத்துடன் ஏறினார் .
மா , கொய்யா மரங்களில் கூட ஏறியறியாதவர் அவர் : பழங்கள் பறித்துக் கொடுக்க , பணம் கொடுத்து ஊர் இளைஞரைக் கேட்டுக் கொள்ளும் வழக்கமுடையவர் .
அவர் அன்று ஒரு நோக்கத்துடன் மரத்தில் ஏறினார் : மரத்தின் உச்சியிலிருந்து இடையன்குடி கிராமத்தைக் கால்ட்வெல் ஐயர் மனையளவை ( survey ) செய்தார் .
கீழே இறங்கியபின் எதிர்கால இடையன்குடி எப்படி அமையவேண்டுமென்று திட்டம் தீட்டி அதன்படி செயல்படத் தொடங்கினார் .
*' ' அடிமை "* வாழ்விலிருந்து விடுதலையும்
கிராம சீரமைப்பும் பணிந்து குனிந்து நுழைந்தாலும் தலையைப் பதம் பார்க்கும் தாழ்வான நுழைவாயில்களுடன் , ஜன்னல்களே இல்லாத இருட்டு வீடுகளே இடையன்குடி கிராமத்தில் இருந்தன .
இவ்வீடுகள் அனைத்தையும் கால்ட்வெல் கிரயத்திற்கு வாங்கினார் .
சில சந்தர்ப்பங்களில் வில்லங்கங்கள் காரணமாக ஒரே இடங்களைக் கால்ட்வெல் மீண்டும் மீண்டும் வாங்கியதும் உண்டு .
இவ்வாறு கிராமம் முழுவதையும் கால்ட்வெல் விலைக்கு வாங்கிவிட்டார் .
ஆயினும் தாங்களே இந்த இடங்களின் பூர்வீகச் சொந்தக்காரர்கள் என்று செல்வந்தரான சில நாடார்கள் உரிமை கொண்டாடினர் .
இடையன்குடி கிராமத்தின் பெரும்பாலான மக்கள் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் இவர்கள் ஏற்கெனவே அந்தப் பூர்வீகச் சொந்தக்காரர்களுக்கு மனை வாடகை ( ground rent ) செலுத்தி வந்தனர் .
மேலும் இவர்களுடைய இல்லங்களிலே திருமணம் போன்ற சிறப்பு வைபவங்கள் வரும்போது இந்த அடிமைகள் அந்த எசமானருக்கு ஒரு சிறு கட்டணம் கொடுத்துவந்திருக்கின்றனர் .
ஆகவே அந்தப் பணக்காரர்கள் , இடையன்குடி கிராமத்தார் தங்களுக்குத் தரை வாடகையும் திருமணக் கட்டணமும் தொடர்ந்து தரவேண்டுமென்றனர் .
இது சட்டப்படியாகச் செல்லுமா என்று ஆராய்ந்து நாளை வீணாக்காமல் , அவர்களுக்குப் பெருந்தொகைகளை மொத்தம் மொத்தமாகக் கொடுத்து , கால்ட்வெல் இந்த அடிமை மக்களை மீட்டார் .
பின்பு அகலமான , நேரான , ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லும் தெருக்களை அமைத்து , ஜன்னல்கள் பொருத்திய சில மாதிரி வீடுகளைக் கட்டி , மக்களை அவற்றில் குடியிருத்தி பெருமகிழ்ச்சியடைந்தார் கால்ட்வெல் ! மேலும் பொருத்தமான இடங்களிலே கால்ட்வெல் கிணறுகள் தோண்டினார் ; பலவகை மரங்களை நாட்டி கருத்துடன் வளர்த்தார் .
அருகிலுள்ள மற்றக் கிராமங்களும் இந்த மாதிரி ' ( model ) கிராமத்தைப் போல அமைய முயற்சித்தார்.
*கிராம சீரமைப்பு*
*மரத்தில் ஏறி மனையளவை செய்தார்*
1842 ஆம் ஆண்டில் ஒரு நாள் .
உயரமான ஒரு மரத்தில் 28 வயது- நிரம்பிய கால்ட்வெல் பாதிரியார் சிரமத்துடன் ஏறினார் .
மா , கொய்யா மரங்களில் கூட ஏறியறியாதவர் அவர் : பழங்கள் பறித்துக் கொடுக்க , பணம் கொடுத்து ஊர் இளைஞரைக் கேட்டுக் கொள்ளும் வழக்கமுடையவர் .
அவர் அன்று ஒரு நோக்கத்துடன் மரத்தில் ஏறினார் : மரத்தின் உச்சியிலிருந்து இடையன்குடி கிராமத்தைக் கால்ட்வெல் ஐயர் மனையளவை ( survey ) செய்தார் .
கீழே இறங்கியபின் எதிர்கால இடையன்குடி எப்படி அமையவேண்டுமென்று திட்டம் தீட்டி அதன்படி செயல்படத் தொடங்கினார் .
*' ' அடிமை "* வாழ்விலிருந்து விடுதலையும்
கிராம சீரமைப்பும் பணிந்து குனிந்து நுழைந்தாலும் தலையைப் பதம் பார்க்கும் தாழ்வான நுழைவாயில்களுடன் , ஜன்னல்களே இல்லாத இருட்டு வீடுகளே இடையன்குடி கிராமத்தில் இருந்தன .
இவ்வீடுகள் அனைத்தையும் கால்ட்வெல் கிரயத்திற்கு வாங்கினார் .
சில சந்தர்ப்பங்களில் வில்லங்கங்கள் காரணமாக ஒரே இடங்களைக் கால்ட்வெல் மீண்டும் மீண்டும் வாங்கியதும் உண்டு .
இவ்வாறு கிராமம் முழுவதையும் கால்ட்வெல் விலைக்கு வாங்கிவிட்டார் .
ஆயினும் தாங்களே இந்த இடங்களின் பூர்வீகச் சொந்தக்காரர்கள் என்று செல்வந்தரான சில நாடார்கள் உரிமை கொண்டாடினர் .
இடையன்குடி கிராமத்தின் பெரும்பாலான மக்கள் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் இவர்கள் ஏற்கெனவே அந்தப் பூர்வீகச் சொந்தக்காரர்களுக்கு மனை வாடகை ( ground rent ) செலுத்தி வந்தனர் .
மேலும் இவர்களுடைய இல்லங்களிலே திருமணம் போன்ற சிறப்பு வைபவங்கள் வரும்போது இந்த அடிமைகள் அந்த எசமானருக்கு ஒரு சிறு கட்டணம் கொடுத்துவந்திருக்கின்றனர் .
ஆகவே அந்தப் பணக்காரர்கள் , இடையன்குடி கிராமத்தார் தங்களுக்குத் தரை வாடகையும் திருமணக் கட்டணமும் தொடர்ந்து தரவேண்டுமென்றனர் .
இது சட்டப்படியாகச் செல்லுமா என்று ஆராய்ந்து நாளை வீணாக்காமல் , அவர்களுக்குப் பெருந்தொகைகளை மொத்தம் மொத்தமாகக் கொடுத்து , கால்ட்வெல் இந்த அடிமை மக்களை மீட்டார் .
பின்பு அகலமான , நேரான , ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லும் தெருக்களை அமைத்து , ஜன்னல்கள் பொருத்திய சில மாதிரி வீடுகளைக் கட்டி , மக்களை அவற்றில் குடியிருத்தி பெருமகிழ்ச்சியடைந்தார் கால்ட்வெல் ! மேலும் பொருத்தமான இடங்களிலே கால்ட்வெல் கிணறுகள் தோண்டினார் ; பலவகை மரங்களை நாட்டி கருத்துடன் வளர்த்தார் .
அருகிலுள்ள மற்றக் கிராமங்களும் இந்த மாதிரி ' ( model ) கிராமத்தைப் போல அமைய முயற்சித்தார்.
No comments:
Post a Comment